குடந்தை மாவட்ட NFTE ஒப்பந்தத் தொழிலாளர் சங்க இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது....
தோழர்களே! தோழியர்களே!! நம் வாழ்வு காத்திட, நம் நிறுவனம் நிலைத்திட வாக்களியுங்கள் இணைந்த கரங்களில்! தேர்வு செய்வீர் எண் : 13. நன்றி.........

Saturday, October 30, 2010

போனஸ் பேச்சுவார்த்தை

ஒப்பந்தத் தொழிலாளிக்கு போனஸ் வழங்க நமது NFTE சங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் :

1) ஒப்பந்தத் தொழிலாளிக்கு போனஸ் வழங்குவது குறித்து நமது பொது மேலாளரிடம் கடந்த புதன் அன்று NFTE மாவட்ட சங்கம் ஒரு கடிதம் கொடுத்தது. அதில் ஒப்பந்தத் தொழிலாளிக்கு 8.33% வீதம் ஒப்பந்தக்காரர் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. அதற்கு பொது மேலாளர் விகிதாசார (PRORATA BASIS) முறையில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறி இருந்தார்.
2) ஒப்பந்தக்காரர் திரு.பாண்டியன் அவர்களிடம் இன்று (30.10.2010) நமது NFTE மாவட்ட சங்கத் தலைவர் தோழர். R. ஜெயபால், மாவட்ட செயலர் தோழர்.S. பாஸ்கரன், தோழர்கள்.கலியமூர்த்தி, C.கணேசன், ஸ்ரீனிவாசன், விஜய் ஆரோக்கியராஜ் ஆகியோர் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஒப்பந்தக்காரர் 8 மணி நேரம் வேலை பார்ப்பவருக்கு வருடத்திற்கு Rs.2000/- வழங்குவதாக கூறுகிறார். மேலும் 6 மாதகாலமாக கேபிள் பழுது பார்க்கும் தோழர்களுக்கு Rs.1000/- தருகிறேன். ஹவுஸ் கீப்பிங் டெண்டர் ஆரம்பித்து 5 மாதம் தானே ஆகின்றது என தொகை குறிப்பிடாமல் பேசினார்.
ஒப்பந்தக்காரர் பேசுவதை பார்த்தால் நமக்கு Rs.625/- தான் கிடைக்கும். நாம் நமது கோரிக்கையான 8.33% படி Rs.1200/- வழங்க வலியுறித்தி உள்ளோம்.
ஒப்பந்தக்காரர் திங்கள் (01.11.2010) அன்று குடந்தை வந்து நேரில் நமது சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி இருக்கிறார்.
தோழமையுடன்,
TMTCLU மாவட்ட சங்கம்
30.10.2010.

Monday, October 25, 2010

ஒப்பந்தத் தொழிலாளிக்கு - போனஸ்?

ஓப்பன் டெண்டர் முறை வந்தால் போனஸ் கிடைக்கும் என்று நிர்வாகமும் ஓபன் டெண்டர் முறைக்கு வக்காலத்து வாங்கிய ஏனய சங்கங்களும் சொல்லியது என்னவாயிற்று?

போனஸ் பற்றி - ஒரு விளக்கம்.
நிர்வாகத்தால் வெளிடப்பட்ட டெண்டர் டாக்குமெண்டில் பாரா-21 : ஏஜென்சியும் அதன் பொறுப்புகளும் என்ற தலைப்பில் பகுதி - m) - இல்
போனஸ் பற்றி குறிப்பிடப் பட்டிருப்பது என்னவென்றால் ஒப்பந்தக்காரர் அரசின் போனஸ் நடைமுறைப்படிவருடத்திற்கு ஒருமுறை 8.33% போனஸ் அதாவது வருடத்திற்கு - 1 மாத சம்பளம் போனசாக அவரது லாபத்திலிருந்து தொழிலாளிக்கு தரவேண்டும். அதுவும் தீபாவளிக்கு முன்னால் பேமென்ட் செய்யவேண்டும் என்று உள்ளது.
இதைப் பற்றி ஒப்பந்தக்காரரிடம் கேட்டால் 4 மாதம் தானே ஆகின்றது. அதனால் மாதம் ஒன்றுக்கு 150 வீதம் ருபாய் 600 தந்து விடுகிறேன் என்கிறார். இது ஏற்புடையது அல்ல.
ஏனனில் 6 மணி நேரம் வேலை செய்யும் தோழருக்கு மாதம் Rs.2892/- என்றால் ஒப்பந்தக்காரர் போனசாக Rs.2892/- தரவேண்டும். ஒப்பந்தக்காரர் கூறுவது போல் வைத்தாலும் ஜூன் முதல் அக்டோபர் வரை 5 மாதத்திற்கு Rs.2892/- ஐ 12 ஆல் வகுத்தால் மாதம் ஒன்றுக்கு Rs.241/- அதை 5 மாதத்திற்கு கணக்கிட்டால் Rs.1205/- வருகிறது.
முறைப்படி 5 மாதத்திற்கு உள்ள போனசாக இந்த தீபாவளிக்குள் Rs.1200/- பெற வேண்டியது நமது கடமை / உரிமை. இன்று (25.10.2010)
இது பற்றி DE(ADMN) அவர்களிடம் பேசி இருக்கிறோம். நாளை பதில் சொல்வதாக சொல்லி இருக்கிறார்.
உரிமைக்காக போராடுவோம்!! நமது உரிமையை வென்றெடுப்போம்!!
போராட்ட வாழ்த்துக்களுடன்,
TMTCLU மாவட்ட சங்கம்.

Tuesday, October 12, 2010

ஒப்பந்த தொழிலாளியின் ஊதியம் ?

ஓபன் டெண்டர் வந்தால் மாதந்தோறும் 7-ந் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படும் என்று நிர்வாகமும் ஓபன் டெண்டருக்கு வக்காலத்து வாங்கிய ஏனைய சங்கங்களும் சொன்னன.
BSNL-லில் பில் பெண்டிங் பற்றி கருத்தில் கொள்ளாமல் ஒப்பந்தக்காரர் ஒவ்வொரு மாதமும் 7-ந் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்று டெண்டர் கண்டிஷன்-இல் பாரா - 21.1-இல் உள்ளது. ஆனால் 01.06.2010 முதல் இன்று வரை 4 மாதமும் ஒரு மாதம் கூட ஒப்பந்தக்காரர் 7-ந் தேதிக்குள் சம்பளம் வழங்கியது கிடையாது.
காண்ட்ராக்ட் மேனேஜர் வசம் சம்பளம் பற்றி கேட்கும் நம் தோழர்களிடம் BSNL-லில் பில் பெண்டிங் உள்ளது. அதனால் பில் வந்தவுடன் தான் பேமென்ட் தருவேன் எனக் கூறுகிறார். இது விதிமுறைகளை மீறிய செயல். இதனை நிர்வாகம் கண்டும் காணாமல் இருப்பது ஏன்?
மேலும் டெண்டர் கண்டிஷன்-இல் பாரா - 22-இல் மாதந்தோறும் 7-ந் தேதிக்குள் சம்பளம் வழங்கப் படாவிடில் 1% பெனாலிட்டி விதிக்கவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஒரு அதிகாரியும் இந்த நான்குமாத பில் தொகையில் பெனாலிட்டி விதிக்காதது ஏன்?
இது பற்றி NFTE மாவட்ட சங்கம் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளது.


தோழமையுடன்
TMTCLU - மாவட்ட சங்கம், குடந்தை



Sunday, October 3, 2010

தேசப் பிதா பிறந்த தினம்

இன்று அக்டோபர் - ௨!! நமது தேசப் பிதா மகாத்மா காந்தியடிகள் பிறந்த தினம்.
அன்பை வெளிப்படுத்தி . . .
உண்மையை வலியுறுத்தி . . .
நல்லிணக்கத்தை போதித்து . . .
அகிம்சையை ஆயுதமாக்கி . . .
இந்திய விடுதலையை முன் நிறுத்தி . . .
போராடிய, முதன்மைப் போராளி . . .
அண்ணல் காந்தி அவர்களின் பிறந்த நாளாம்
அக்டோபர் 2 - ல் . . .
அவர்தம் சிந்தனையைப் போற்றுவோம்!
கடைபிடிக்க உறுதியேற்போம்!!