நமது குடந்தைக் கோட்ட குப்தா, அநீதிகளை களைய சாட்டையை சுழற்றும் மாவீரன், தொழிலாளிக்காக தியாகம் பல செய்த தியாகச் சுடர், நமது மாவட்ட ஒப்பற்ற தலைவர் தோழர். R. ஜெயபால் அவர்களது பணி ஓய்வு பாராட்டு விழாவின் தொடக்கம் தோழரின் "தோழமைத் தோட்டம்" அமைந்துள்ள நகரிலிருந்து மரக் கன்று நடுதளுடன் வெகு விமரிசையாக தொடங்கியது. மரக் கன்று நட்டு அந்த மரக் கன்று எப்படி தழைத்தோங்கி வளர்கிறதோ அது போல் தான் சார்ந்த இயக்கம் தழைத்தோங்கட்டும் என தங்க தலைவரின் கையால் மரக் கன்று நட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா நாயகர் தோழர்கள் பலர் புடைசூழ ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
தலைவரின் பணி ஓய்வு பாராட்டு விழா GM Champer - ல் காலையிலும், மனமகிழ் மன்றத்தின் சார்பாக மாலை 4 மணிக்கு ஆரம்பித்து இரவு 8 மணி வரை நடை பெற்றது. இதில் கால நேரம் பாராமல் தோழர், தோழியர்கள் இறுதி வரை இருந்து சிறப்பித்தது பாராட்டுக்குரியது.
காலை GM champer - ல் நடந்த விழாவும் சரி, மாலை மனமகிழ் மன்றத்தில் நடந்த விழாவும் சரி, இது போன்ற பணி ஓய்வு பாராட்டு விழா குடந்தை மாவட்டத்தில் இதுவரை நடந்ததில்லை. இனி நடக்கப் போவதும் இல்லை என்ற அளவிற்கு அனைத்து சங்க தோழர்களும், அதிகாரிகளும் வந்து பாராட்டிய மாண்பு நமது தலைவரின் உயர்ந்த தொண்டை பறை சாற்றியது.
தலைவர் ஏற்புரை நல்கியபோது வானமே "இப்படி ஒரு மனிதன் வாழ்ந்து சாதித்து இந்த இலாக்கவிளிருந்து ஓய்வு பெருகின்றாரே" என்று கண்ணீர் விடுவது போல் மழையாக கொட்டித் தீர்த்தது.
எது எப்படியோ நம்மை வழிநடத்த இனி எவர் இருக்கிறார் என கவலை பட்டு கொண்டிருந்த நேரத்தில் நான் எங்கு செல்ல இருக்கிறேன்? என் வாழ்கை எப்போதும் உங்களோடுதான். உங்களை எல்லாம் வழி நடத்துவேன் என தனது ஏற்புரையில் தலைவர் கூறியது அனைவருக்கும் பெரும் நிம்மதியை அளிப்பதாக இருந்தது.
காலமுட்டும் வாழும் உங்கள் சாதனை!
பணி ஓய்வு மட்டும் தவிர்க்க முடியா வேதனை!!
நல்லவராய் வாழ்ந்ததென்ன வாழ்க்கையிலே!
ஒரு வல்லவராய் திகழ்ந்ததென்ன நாங்கள் பார்க்கையிலே!!
நம்மில் பிரிவு என்பதில்லை எங்கள் தங்கமே!
பணி ஓய்வுறும் நீதான் எங்கள் சிங்கமே!!
நன்றியுடன்,
குடந்தை மாவட்ட NFTE ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம்